×

மகளுக்கு தொல்லை செய்த தந்தை போக்சோவில் கைது

சென்னை: கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தில் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ராம் பகதூர் (47). இவர், கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராம் பகதூர் தனது 5 வயது மகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவரது மனைவி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் மாலையில் ராம் பகதூரை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...